Monday, December 30, 2013

கப்ரில் உள்ளவர்களுக்காக நாம் செய்யவேண்டிய துஆ




கப்ரில் உள்ளவர்களுக்காக நாம் செய்யவேண்டிய துஆ


அல்லாஹ் கூறுகிறான்: -
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.

 (அல்-குர்ஆன் 21:35)
--
 “முஃமினான மண்ணறைவாசிகளே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும்

. நிச்சயமாக நாங்களும் அல்லாஹ் நாடினால் உங்களை மரணம் மூலம் சந்திப்பவர்களே!அறிவிப்பவர் : அபூஹுரைரா,  رَضِيَ اللَّهُ عَنْهُ , நூல்கள் : முஸ்லிம், அஹ்மது, நஸயீ.


முஃமினான, முஸ்லிமான மண்ணறை வாசிகளே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! நிச்சயமாக, இன்ஷா அல்லாஹ், நாங்களும் உங்களை அடுத்து வருபவர்களே!

 உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ்விடம் சுகவாழ்வைக் கேட்கிறோம்அறிவிப்பவர் : புரைதா   رَضِيَ اللَّهُ عَنْهُ , நூல்கள்: முஸ்லிம், அஹ்மது, இப்னு மாஜா.



-
இறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்
"நபி(ஸல்)அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் இறந்து விட்டால்
அவனுடைய செயல் முடிந்து விடுகிறது, ஆனால் மூன்று விதமான செயல்கள் மட்டும்
எஞ்சியிருக்கின்றன.

1.      . அதாவது மக்கள் காலங்காலமாக பயன் அனுபவித்து வரும் வகையிலான தருமங்கள்.
2.     . பயன் அளிக்கும் கல்வி
3.      . அவனுக்காகப் பிராத்தனை புரிந்து வரும் நல்ல பிள்ளைகள்

அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி)
ஆதாரம் : முஸ்லிம், மிஷ்காத்






After Death Part -1<http://www.youtube.com/watch?v=tc87523WiVw&feature=plcp>
After Death Part -2<http://www.youtube.com/watch?v=Y_R-aUOmTyw&feature=plcp>
After Death Part -3<http://www.youtube.com/watch?v=e7HKlu4HIpQ&feature=plcp>








No comments: