சபையை முடிக்கும் போது
ஒரு சபையை முடிக்கும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறினால் அந்தச் சபையில் நடந்த தவறுகள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ 3355
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(இ) ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்பி(எ)ரு(க்)க வஅதூபு(இ) இலை(க்)க.
இதன் பொருள் : இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.
அல்லது கீழ்க்கண்ட துஆவையும் ஓதலாம்.
ஸுப்(இ)ஹான(க்)கல்லாஹும்ம வபி(இ)ஹம்தி(க்)க அஸ்தக்பி(எ)ரு(க்)க வ அதூபு(இ) இலை(க்)க.
இதன் பொருள்: இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உன்னிடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன். ஆதாரம்: நஸயீ1327
***********
நிறைய இடத்தில் சிலர் கூடி பேசும் போது தீடீருன்னு மற்றொருவர் வந்தால் உடனே பேச்சை நிறுத்தாதீர்கள். அது வந்து அமர்கிறவர்கள் மனதில் கடும் மனக்கவலையை உண்டு பண்ணும், இது வரை நம்மை பற்றி தான் பேசிக்கொண்டு இருக்கிறார்களோ என்று நினைக்க தோன்றும்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam.jpg)
1 comment:
ஜலீலா கமால் (Jaleela Kamal ) அவர்கள் கண்டெடுத்த முத்தான துஆக்கள் 100.
பெற்றதாயினும்தொன்னூற்றொன்பது மடங்கு கருணை மிக்கவன் அல்லாஹ்;தாய்ப்பறவை தன் குஞ்சுகளிடத்தில் காட்டுகின்ற அன்பைவிட ஆயிரம் மடங்கு அன்பை நம்மீது பொழிபவன் அல்லாஹ்.
********************************************************************
ஜலீலா கமால் (Jaleela Kamal ) அவர்கள் கண்டெடுத்த முத்தான துஆக்கள் 100.
ஜலீலா கமால் (Jaleela Kamal ) அவர்களின் வலைபூக்கள்
குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்
முத்தான துஆக்கள்
ஜலீலாவின் பயனுள்ள டிப்ஸ்கள்
சமையல் அட்டகாசங்கள்
*அனுபவங்கள்*
http://seasonsnidur.blogspot.in/2014/09/jaleela-kamal-100.html
Post a Comment