உள்ளங்களை ஊடுருவி பார்க்கும் வல்லவனே!அல்லாஹ்வே!
என் ஆழ்மனதில் அமர்ந்து கொண்டு மௌனமாக என் உள்ளத்தை அரித்துக் கொண்டிருக்கும் கவலையிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்
اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ ، لَا إِلَهَ إِلَّا أنْتَ
அல்லாஹும்ம ரஹ்மத்தக அர்ஜூ ஃபலா தகில்னீ இலா நஃப்ஸீ தர்ஃபத்த ஐனின் வ அஸ்லிஹ்லீ ஷஃனீ குல்லஹு லாயிலாஹா இல்லா அனத்த.
யா அல்லாஹ் நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன் கண் இமைக்கும் நேரத்திற்கு கூட நீ என்னை உன் பொறுப்பிலிருந்து என் பொறுப்பில் விட்டு விடாதே! என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர யாருமில்லை.
மீண்டும்,மீண்டும் உன்னை புகழ்கிறேன் உனக்கு நன்றி செலுத்துகிறேன். உனக்கு நன்றி செலுத்தும் அடியானாக என்னின் மீது நீ திருப்தி யாக இருக்கும் நேரத்தில் என்னை உன் பக்கம் அழைத்துக் கொள்.
அல்லாஹும்ம ஸல்லிஅலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத்
கனியூர் இஸ்மாயில் நாஜி.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam

No comments:
Post a Comment